நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பு: காலையில் தொடங்கியது 

கோலாலம்பூர்: 

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

முன்கூட்டியே வாக்களிப்பு நடவடிக்கைக்காக இரு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த முன்கூட்டியே வாக்களிப்பில் 625 போலீஸ் அதிகாரிகளும் 238 ராணுவ அதிகாரிகளும் மற்றும் அவர்களின் மனைவிமார்களும் வாக்களிக்கின்றனர்.

முன்கூட்டியே வாக்களிப்பு காலை 8 மணிக்குத் தொடங்கிய நிலையில் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று இதற்கு முன் மலேசிய தேர்தல் ஆணையம் தெரிவிதத்திருந்தது. 

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதில் 40,226 பேர் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset