நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பதிலடி பயங்கரமாக இருக்கும்: ஈரான் அதிபர்

டெஹ்ரான்:

தங்கள் நாட்டில் இஸ்ரேல் சிறிய தாக்குதல் நடத்தினாலும் கூட, அதற்கான தங்களின் பதிலடி பயங்கரமானதாக இருக்கும் என்று ஈரான் பிரதமர் இப்ராஹிம் ரய்சி எச்சரித்தார்.

ராணுவ அணிவகுப்பில் இப்ராஹிம் ரய்சி பேசுகையில், அல்அக்ஸா வெள்ளம் என்ற ஈரானின் நடவடிக்கை மூலம் இஸ்ரேல் மாபெரும் ராணுவ சக்தி என்ற மாயை உடைந்துவிட்டது.

இது மிகவும் சிறிய அளவிலான தாக்குதலாகும். எங்கள் எல்லைக்குள் அத்துமீறி இஸ்ரேல் சிறிய தாக்குதல் நடத்தினால் கூட, அதற்கான பதிலடி பிரம்மாண்டமானதாகவும் பயங்கரமானதாகவும் இருக்கும் என்றார் அவர்.

இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள தங்களது படைகள் தயாராக இருப்பதாக அந்த நிகழ்ச்சியில் பேசிய ஈரான் விமானப் படை தலைமைத் தளபதி தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset