செய்திகள் இந்தியா
ஊழலின் சாம்பியன் மோடி: ராகுல் காந்தி
காஜியாபாத்:
தேர்தல் நன்கொடை பத்திரம் திட்டத்தை வைத்து மிரட்டி பணம் பறித்த பிரதமர் நரேந்திர மோடி தான் ஊழலின் சாம்பியன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்தார்.
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாதில் ராகுல் காந்தியும் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பிரச்னைகளிலிருந்து மக்களை திசைத் திருப்பும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது.
சில நேரங்களில் பிரதமர் மோடி கடலுக்கு அடியில் செல்வார் அல்லது விமானத்தில் பயணிப்பார். ஆனால், நாடு சந்தித்து வரும் முக்கிய பிரச்னைகள் குறித்து எதுவும் பேசமாட்டார்.
தேர்தல் நன்கொடை திட்டம் மூலம் பாஜகவுக்கு பல கோடிகள் நன்கொடை அளித்தவர்களின் பெயர்கள், நன்கொடை அளிக்கப்பட்ட தேதி ஆகிய விவரங்கள் ஏன் மறைக்கப்பட்டன?
இது உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டமாகும். இதை செயல்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி ஊழலின் சாம்பியன் ஆவார் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm