செய்திகள் இந்தியா
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
புதுடில்லி:
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சங்கீத் சிங் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வயது 24.
சிங் டில்லியின் இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் பிடிபட்டதாக கூறப்படுகிறது.
அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானியின் உடையை அணிந்துகொண்டு விமான நிலையத்தின் அருகே சுற்றித் திரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் சிங் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அடையாள அட்டையையும் வைத்திருந்ததாக தகவல்கள் கூறுகிறது.
சோதனை நடவடிக்கைக்குப் பின்னர் அடையாள அட்டை போலி என்பது தெரியவந்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2024, 10:05 pm
மக்களவை 4-ஆம் கட்ட தோ்தல்: 96 தொகுதிகளில் பிரசாரம் நிறைவடைந்தது
May 9, 2024, 6:13 pm
இரண்டாம் நாளாகப் பல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் ரத்து
May 9, 2024, 9:06 am
நீட் தேர்வு வினாத்தாள் கசியவில்லை: NTA விளக்கம்
May 8, 2024, 10:59 pm
ஈரானில் இருந்து தப்பி மீன்பிடிபடகில் கேரளம் வந்த 6 தமிழர்கள் கைது
May 8, 2024, 10:43 pm
வாக்காளர்களை மிரட்டும் வகையில் விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப் பதிவு
May 7, 2024, 11:50 am
பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் மோடி குஜராத்தில் வாக்களித்தார்
May 7, 2024, 8:48 am