நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாரு வேட்பாளர் இன்னும்  முடிவாகவில்லை: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இருப்பினும் இந்த வேட்பாளர் பட்டியலில் புதியவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ஜசெக தலைமை செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்த வேட்பாளர்கள் விவகாரம்  பின்னர் விவாதிக்கப்படும்.

எங்களிடம் ஏற்கெனவே பல வேட்பாளர்கள் தேர்வுகள் உள்ளனர். புதியவர்களின் பெயர்களும் அதில் இணைக்கப்பட்டுள்ளது.

மறைந்த கர்பால் சிங்கின் 10ஆவது ஆண்டு நினைவு விழாவிற்கு பின்  செய்தியாளர்களிடம்  பேசிய அந்தோனி லோக் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset