நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலி வேலை வாய்ப்பு, இல்லாத முதலீடுகளில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்

ஜொகூர்பாரு:

போலி வேலை வாய்ப்பு, இல்லாத முதலீடுகளில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜொகூர் போலீஸ்படைத் தலைவர் எம். குமார் இதனை தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 8 வெளிநாட்டு ஆண்கள், ஒரு பெண் உட்பட 2 உள்ளூர் நாட்டவர்களும் அடங்குவர்.

கைதானவர்கள் அனைவரும் 28 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.

நேற்று மாலை 6 மணியளவில் இரண்டு குடியிருப்புகளில் நடத்திய சோதனையில் 41 கைத்தொலைபேசிகள், 6 கணினிகள், மூன்று ஏடிஎம் கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

முகநூல், டெலிகிராம் மூலம் சிண்டிகேட் உறுப்பினர்கள் வெளிநாட்டில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset