நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்லிஸ் மந்திரி புசார் மீதான விசாரணை தேசியக் கூட்டணியின் பிரச்சாரத்தை பாதிக்காது: அஸ்மின்

கோல குபு பாரு:

பெர்லிஸ் மந்திரி புசார் மீதான விசாரணை  தேசியக் கூட்டணியின் பிரச்சாரத்தை பாதிக்காது.

தேசியக் கூட்டணியின் சிலாங்கூர் மாநில தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி இதனை கூறினார்.

பெர்லிஸ் மந்திரி புசார் முஹம்மத் ஷுக்ரி ரம்லி மீது எம்ஏசிசி விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த விசாரணை கோல குபு பாரு இடைத்தேர்தலில்  தேசியக் கூட்டணியின் பிரச்சாரத்தை பாதிக்காது.

தனது கட்சி பிரச்சாரத்தைத் தொடரும் என்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து வாக்காளர்களுக்கு விளக்கங்களை அளிக்கும் என்றும் அஸ்மின் கூறினார்.

உதாரணமாக தேசியக் கூட்டணி வேட்பாளர் கைருல் அஸ்ஹரி சௌத்தின் கல்வித் தகுதி குறித்து நம்பிக்கை கூட்டணியால் கேள்வி எழுப்பப்பட்டது.

இது நாட்டின் உண்மையான பிரச்சினையைத் திசைத் திருப்பும் முயற்சி என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset