நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிலாளர்களின் பங்கை அரசாங்கம் அங்கீகரிக்கிறது: பிரதமர் அன்வார்

புத்ராஜெயா:

நாட்டின் தொழிலாளர்களின் பங்கை அரசாங்கம் பாராட்டுவதுடன் அங்கீகரிக்கிறது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

வேண்டுமென்றே யாரையும் குறைமதிப்பிடுவது இழிவுபடுத்தும் முயற்சிக்கும் எந்தக் கட்சிக்கும் எதிராக தொழிலாளர்கள் எழுந்து நின்று போராட வேண்டும்.

மக்களின் உரிமைகளை மறுப்பதுடன் இனத்தையும் மதத்தையும் இழிவுபடுத்தும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் செயற்பாடுகளை சகித்துக் கொள்ள முடியாது.

எங்களுக்கு சவால்விட, யாரையும் தரம் தாழ்த்த முயற்சிக்கும் குரல் இருந்தால் நிறுத்துங்கள்.

நீங்கள் எழுந்து நின்று உங்கள் முழு பலத்துடன் போராடுங்கள்.

எந்தவொரு இனத்தையும், மதத்தையும் அவமதிக்கவோ அல்லது அவர்களின் உரிமைகளை மறுக்கவோ வேண்டாம்.

புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தேசிய  தொழிலாளர்கள் தின விழாவில்  உரையாற்றிய பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset