செய்திகள் மலேசியா
கவலைப்பட ஒன்றும் இல்லை: பெர்லிஸ் மந்திரி புசார்
புத்ராஜெயா:
பெர்லிஸ் மந்திரி புசார் முகம்மது ஷுக்ரி ராம்லி எம்ஏசிசி தலைமையகத்துக்குச் சென்று வாக்குமூலம் அளித்துத் திரும்பினார்.
ஆணையம் நடத்தும் விசாரணையில் முழுமையாக ஒத்துழைக்கக் கடப்பாடு கொண்டிருப்பதாகத் தமது முகநூலில் பக்கத்தில் முகம்மது ஷுக்ரி பதிவிட்டார்.
வாக்குமூலம் அளித்துவிட்டேன். உண்மைத் தகவல்களை மட்டுமே நாடி, அவற்றைப் பகிர்வது மிகவும் முக்கியம்.
பொய்ச் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று முகம்மது ஷுக்ரி கூறினார்.
முகம்மது ஷுக்ரியின் மகன் பொய்யான கோரிக்கைகளைச் சமர்ப்பித்துப் பணம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து முகம்மது ஷுக்ரியிடம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தைப் பெற ஆணையம் அவரை அழைத்திருந்தது.
இதனை முன்னிட்டு 63 வயது முகம்மது ஷுக்ரி, நேற்று காலை புத்ராஜெயாவில் உள்ள ஆணையத்தின் தலைமையகத்துக்குச் சென்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 21, 2024, 11:19 pm
ரஹ்மா அடிப்படை உதவித் தொகை திட்டதிற்கான நிதி 5 மடங்கு உயர்வு: பிரதமர்
May 21, 2024, 10:27 pm
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட டீசல் உதவித் தொகை திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது: பிரதமர்
May 21, 2024, 10:00 pm
கல்வியிலும் நற்பண்புகளிலும் சிறந்த மாணவர்களே நம் சமுதாயத்தின் பெருமை: சுரேன் கந்தா
May 21, 2024, 6:24 pm
பெட்ரோல் நிலையத்தில் மேகி நூடல்ஸ் சமைத்த நால்வருக்கு தலா 500 வெள்ளி அபராதம்
May 21, 2024, 6:03 pm
பிரதமராகியிருக்க வேண்டிய தெங்கு ரசாலிக்கு முட்டுக்கட்டை போட்டவர் மகாதீர்: மூசா ஹீத்தாம்
May 21, 2024, 5:29 pm
மஇகா ரவூப் தொகுதித் தேர்தலில் டத்தோ தமிழ்ச்செல்வன், ஆனந்தசெல்வம் அணி வெற்றி
May 21, 2024, 5:14 pm
பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினர் உடல் நிலை சீராக உள்ளது
May 21, 2024, 5:05 pm