நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கவலைப்பட ஒன்றும் இல்லை: பெர்லிஸ் மந்திரி புசார்

புத்ராஜெயா:

பெர்லிஸ் மந்திரி புசார் முகம்மது ஷுக்ரி ராம்லி எம்ஏசிசி தலைமையகத்துக்குச் சென்று வாக்குமூலம் அளித்துத் திரும்பினார்.

ஆணையம் நடத்தும் விசாரணையில் முழுமையாக ஒத்துழைக்கக் கடப்பாடு கொண்டிருப்பதாகத் தமது முகநூலில் பக்கத்தில் முகம்மது ஷுக்ரி பதிவிட்டார்.

 வாக்குமூலம் அளித்துவிட்டேன். உண்மைத் தகவல்களை மட்டுமே நாடி, அவற்றைப் பகிர்வது மிகவும் முக்கியம். 

பொய்ச் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று முகம்மது ஷுக்ரி கூறினார்.

முகம்மது ஷுக்ரியின் மகன் பொய்யான கோரிக்கைகளைச் சமர்ப்பித்துப் பணம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து முகம்மது ஷுக்ரியிடம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தைப் பெற ஆணையம் அவரை அழைத்திருந்தது.

இதனை முன்னிட்டு 63 வயது முகம்மது ஷுக்ரி, நேற்று காலை புத்ராஜெயாவில் உள்ள ஆணையத்தின் தலைமையகத்துக்குச் சென்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset