நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சத்தீஸ்கரில் 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

புது டெல்லி: 

சத்தீஸ்கர் மாநிலத்தில் 29 நக்ஸல்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

சத்தீஸ்கரின் அடர்ந்த காட்டுப்பகுதியான பஸ்தரில் உள்ள பினாகுண்டா, கொரோனார் கிராமங்களுக்கு இடையே மாவோயிஸ்ட் மற்றும் நக்ஸல் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் சிலர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையினர், காவல்துறை சிறப்புப் படையினர் அடங்கிய குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அங்கு மறைந்திருந்த நக்ஸல்கள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில்  29 நக்ஸல்கள் உயிரிழந்தனர். இந்த மோதலில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர்.

காங்கேர் பகுதியில் ஏப்ரல் 26ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset