செய்திகள் இந்தியா
சத்தீஸ்கரில் 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
புது டெல்லி:
சத்தீஸ்கர் மாநிலத்தில் 29 நக்ஸல்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
சத்தீஸ்கரின் அடர்ந்த காட்டுப்பகுதியான பஸ்தரில் உள்ள பினாகுண்டா, கொரோனார் கிராமங்களுக்கு இடையே மாவோயிஸ்ட் மற்றும் நக்ஸல் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் சிலர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையினர், காவல்துறை சிறப்புப் படையினர் அடங்கிய குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அங்கு மறைந்திருந்த நக்ஸல்கள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் 29 நக்ஸல்கள் உயிரிழந்தனர். இந்த மோதலில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர்.
காங்கேர் பகுதியில் ஏப்ரல் 26ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm