செய்திகள் மலேசியா
மாமன்னரின் கூடுதல் உத்தரவை அரசாங்கம் ஏன் மறைக்கிறது?: வழக்கறிஞர் ஷாபி கேள்வி
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் வீட்டுக் காவலில் தண்டனையை கழிக்க அனுமதித்த மாமன்னரின் கூடுதல் உத்தரவை அரசாங்கம் ஏன் மறைக்கிறது.
இந்த விவகாரத்திற்கு அரசாங்கம் உரிய விளக்கத்தை தர வேண்டும் என நஜீப்பின் வழக்கறிஞர் டான்ஶ்ரீ ஷாபி அப்துல்லா கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட பல்வேறு அமைச்சர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டது.
ஆனால் எந்த பதிலும் வரவில்லை. இந்த விவகாரத்தை யாராலும் மறைக்க முடியாது. இது மாட்சிமை தங்கிய மாமன்னரின் உத்தரவு.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டான்ஶ்ரீ ஷாபி அப்துல்லா இவ்வாறு கூறினார்.
மாமன்னரின் கூடுதல் உத்தரவை அமல்படுத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்காக, நீதித்துறை மறுஆய்வு வழக்கின் விசாரணையில் ஷாபி கலந்துக் கொண்டார்.
இந்த விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க ஜூன் 5 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது என்று ஷாபி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:10 am
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
May 1, 2024, 12:08 am
கடின உழைப்பை மூலதனமாகக் கொண்டு வாழ்வின் உயர்ந்த இடத்தை அடைவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
May 1, 2024, 12:07 am
நாட்டின் மேம்பாட்டிற்கு வித்திடும் தொழிலாளர்களை மதிப்போம்: டத்தோ ரமணன்
May 1, 2024, 12:02 am
ஆலயங்களில் பஜன் குழுவை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
April 30, 2024, 9:36 pm
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணனின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு
April 30, 2024, 4:38 pm
3.3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக நீர் நிறுவனத்தின் 2 அதிகாரிகள் கைது
April 30, 2024, 4:14 pm