நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலயங்களில் பஜன் குழுவை அமைக்கும் முயற்சிகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளது

ஈப்போ:

ஆலயங்களில் பஜன் யாத்திரையை  நடத்துவதற்கான முயற்சிகளை ஈப்போ இந்து சங்கம், சத்திய சாய் பாபா இயக்கம் ஆகியவை முன்னெடுத்துள்ளது.

இதன் தொடக்க நிகழ்வு ஈப்போவில உள்ள இந்து சங்க கட்டடத்தில் சிறப்புடன் நடைபெற்றது.

இதனை புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்.

இந்து மக்களிடையே  சமய விழிப்புணர்வை  ஏற்படுத்த ஆலய நிர்வாகங்கள்  மட்டும்  அல்ல  இந்து சங்கமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதைக் காண முடிகிறது.

ஆலயங்களில சமய வகுப்புகள் வழி தேவாராம்,  திருவாசகம் , திருப்புகழ் வழி பல நல்ல சமய பாடல்கள் நமக்கு தெய்வ நம்பிக்கையை வலுவூட்டியது.

இன்னமும பல ஆலயங்களில் சமய வகுப்புபுகள் நடத்தப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.

ஈப்போ இந்து சங்கம் ஆலயங்களில் பஜன் யாத்திரையை நடத்த ஈப்போவில் உள்ள சத்திய சாய் பாபா இயக்கத்துடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்பதாக துளசி மனோகரன் குறிப்பிட்டார்.

இளைய தலைமுறையினரிடம் சமய விழிப்புணர்வை ஏற படுத்த தொடர்ந்து இந்து சமய அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக இந்த நிகழ்வில் பேசிய ஈப்போ இந்து சங்கத் தலைவர் விஜயகுமார் கிருஷ்ணன் குட்டி, ஆலயங்களில் பஜன் குழுவை அமைக்க ஈப்போ இந்து சங்கம் நடவடிக்கையை எடுத்து வருகிறது.

இதன் பயனாக இங்கு ஈப்போ சத்ய சாய்பாபா இயக்கத்தின் ஆதரவோடு பஜன் பாத்திரையை தொடங்கியுள்ளோம்.

முதலில் ஈப்போ வட்டாரத்தில் தொடங்கப்படும் , படிப்படியாக மாநில நிலையில் உள்ள ஆலங்களில் பஜன்  குழுவை அமைக்கவேண்டும் என்று நடவடிக்கையில் ஈடுபட்டுளோம்.

அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த நிகழ்வை தொடக்கி வைக்க துளசி மனோகரன் வருகை அளித்துள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset