நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணனின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு

தாப்பா:

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணனின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஒவ்வொரு பெருநாள் காலங்களிலும் டத்தோஸ்ரீ சரவணன் திறந்த இல்ல உபசரிப்பை நடத்தி வருகிறார்.

அவ்வகையில் இவ்வாண்டுக்கான நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு தாப்பா அரேனா மெர்டேக்காவில் நடைபெற்றது.

இந்த திறந்த இல்ல உபசரிப்பில் ஆயிரக்கணக்கான பல்லின மக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர.

விருந்து உபசரிப்புடன் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பல்லின மக்கள்  வாழும் நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் மக்களிடையே நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தும்.

அவ்வகையில் பல்லின மக்கள் பயனளிக்கும் நடவடிக்கைகள் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்படும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset