நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உறுப்பினர்களின் நலன், மேம்பாட்டுத் திட்டங்களில் சிலாங்கூர் மக்கள் பல்நோக்கு கூட்டுறவுக் கழகம் கவனம் செலுத்தும்

செமினி:

உறுப்பினர்களின் நலன், மேம்பாட்டுத் திட்டங்களில் சிலாங்கூர் மக்கள் பல்நோக்கு கூட்டுறவுக் கழகம் கவனம் செலுத்தும்.

அக்கழகத்தின் தலைவர் நிராகர் இதனை தெரிவித்தார்.

சிலாங்கூர் மக்கள் பல்நோக்கு கூட்டுறவுக் கழகம் தொடங்கப்பட்டு தற்போது 50ஆவது நிறைவு விழாவை கொண்டாடுகிறது.

இக்கூட்டுறவுக் கழகத்திற்கு துன் சாமிவேலு தலைவராக இருந்து பல திட்டங்களை மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாக செமினியில் வீடமைப்பு திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொண்டு அதனை உறுப்பினர்களுக்கு விற்றுள்ளது.

இப்படி இக்கூட்டுறவுக் கழகம் வெற்றி பாதையில் பயணித்து வருகிறது.

இந்நிலையில் கழகத்தின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

உலுலங்காட், கோம்பாக் கூட்டுறவு ஆணையத்தின் உதவி இயக்குநர் அமிரா நமிலா இந்நிகழ்வுக்கு தலைமையேற்றார்.

இவ்விழாவில் முக்கிய அங்கமாக கழகத்தின் வெற்றிக்கு சேவையாற்றிய நல்லுள்ளங்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

மேலும் வரும் காலங்களில் உறுப்பினர்களின் நலன், மேம்பாட்டுத் திட்டங்களில் சிலாங்கூர் மக்கள் பல்நோக்கு கூட்டுறவுக் கழகம் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset