நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

7 மாநிலங்களில் நடைபெறவுள்ள மடானி நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் அன்வார் கலந்து கொள்வார்

புத்ராஜெயா: 

நாட்டின் ஏழு மாநிலங்களில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான மடானி நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சிகளில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்வார் என்று இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார். 

முதல் நாளான நாளை ஜொகூரில் நடைபெறும் மடானி நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து சிறப்பிப்பார்.  

ஏப்ரல் 20-ஆம் தேதி சபாவிலும், ஏப்ரல் 22-ஆம் தேதி மலாக்காவிலும், மே 2-ஆம் தேதி கிளந்தானிலும், மே 4-ஆம் தேதி கெடாவிலும், மே 5-ஆம் தேதி பினாங்கிலும், மே 9-ஆம் தேதி திரெங்கானுவிலும் நடக்கும் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து சிறப்பிப்பார் என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் பிரதமர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நிலையில் மாநில மந்திரி பெசார் அல்லது முதல்வர்களும் முக்கியப் பிரமுகர்களாகக் கலந்து கொள்வார்கள்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset