நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இடை விடாத கனமழை: கிள்ளான் மேரு வெள்ளத்தில் மூழ்கியது

கிள்ளான்:

இடை விடாத கனமழையை தொடர்ந்து கிள்ளான் மேரு வெள்ளத்தில் மூழ்கியது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கிள்ளான் மேரு வட்டாரம் இன்று காலை வெள்ளத்தில் மூழ்கியது.

அப்பகுதியில் உள்ள பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் குறைந்தது 0.6 மீட்டர் அளவுக்கு வெள்ளத்தில் மூழ்கியது.

மேருவின் ஜாலான் தெராத்தாய், ஜாலான் கெனாங்கான், ஜாலான் செம்பகா, ஜாலான் ஹாஜி சாலே, தாமான் ஓர்கிட், பெர்சியாரான் ஹம்சா அலாங், ஜாலான் கஸ்பான், ஜாலான் அப்துல் மனான் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ளது.

இந்த திடீர் வெள்ளத்தால் அப்பகுதியின் வாழும் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset