செய்திகள் மலேசியா
லாஹாட் டத்து போலிஸ் தலைவரின் மகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்: டான்ஸ்ரீ ரசாருடின்
கோலாலம்பூர்:
லாஹாட் டத்து போலிஸ் படைத் தலைவரின் மகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதனை தேசிய போலீஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் உறுதிப்படுத்தினார்.
லாஹாட் டத்து மாவட்ட போலீஸ்படைத் தலைவர் ஏசிபி துல்பஹாரின் இஸ்மாயிலின் 14 வயது மகள், சபாவின் லஹாத் டத்துவில் உள்ள தாமான் தபானக்கில் உள்ள அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் அவர் இறந்து கிடந்தார்.
இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவரின் 16 வயது சகோதரி பள்ளியில் இருந்து திரும்பிய பிறகு இறந்து அறையில் கிடந்த தனது சகோதரியைக் கண்டார்.
மரணமடைந்தவரின் தந்தை, பதவி உயர்வு பெற்ற பிறகு லாஹாட் டத்துவுக்கு இடம் மாறியதால், சம்பவத்தின் போது அவர் வீட்டை மாற்றுவதற்காக கினபாத்தாங்கில் இருந்தார்.
அவர் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி லாஹாட் டத்துவின் போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆகவே யாரும் ஆரூடங்களை வெளியிட வேண்டாம் என்று டான்ஸ்ரீ ரஸாருடின் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm
மக்கள் பிரச்சினைகளில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
April 29, 2024, 6:07 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
April 29, 2024, 5:39 pm
ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை: 178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்
April 29, 2024, 5:24 pm
உலக வங்கியின் அறிக்கை குறித்து விளக்கமளிப்பதை கல்வியமைச்சர் தவிர்த்துள்ளார்
April 29, 2024, 5:23 pm
போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட காதலர் ஜோடி கைது
April 29, 2024, 5:20 pm
கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு
April 29, 2024, 3:21 pm