நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அரசியல் சாசனத்தை அகற்ற பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி: ராகுல்

வயநாடு: 

இந்தியாவின் அரசியல் சாசனத்தை அகற்ற பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் முயற்சி செய்வதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், கேரளத்தை நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகம் ஏன் ஆள வேண்டும்?

தென் மாநிலங்களை கிராமங்களில் இருந்து ஆள வேண்டும்.

பாஜகவினர், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அரசியல் சாசனத்தையும் ஜனநாயக நடைமுறைகளையும் அகற்ற விரும்புகின்றனர்.

வயநாடு மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட இல்லாததற்கு கேரளத்தில் ஆட்சிபுரியும் இடதுசாரி அரசுதான் காரணம்.

நாடு ஒரு தலைவரை மட்டும் கொண்டிருக்க வேண்டும் என்ற பாஜக அரசு திணிக்கிறது. இது நாட்டு மக்களை அவமதிப்பதாகும். இந்த வகையான சிந்தனையே காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடாகும் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset