நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கைபூலோ வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும்: டத்தோ ரமணன்

சுங்கைபூலோ:

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தனது தொகுதி மக்களுக்கு உரிய உதவிகள் விரைவாக வழங்கப்படும் என்று சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் துணையமைச்சருமான டத்தோ ரமணன் கூறினார்.

சுங்கை பூலோ பகுதி திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது என்ற தகவல் கிடைத்தவுடன், பாதிக்கப்பட்ட பல பகுதிகளின் தற்போதைய நிலைமையை கண்டறிய சம்பவ இடத்திற்கு சென்றேன்.

குறிப்பாக சுங்கை பூலோவில் உள்ள கம்போங் மலாயு சுபாங், கம்போங் குபு காஜா பகுதிகள் இந்த வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் குறித்து நட்மா, ஜேகேஎம், போலீஸ்படை உட்பட பல அரசு இலாகாக்களுடன் பேசப்பட்டது.

தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 பேர் சுங்கைபூலோ மெர்பாவ் செம்பாக் பள்ளியில் திறக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுங்கைபூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் வாயிலாக உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று டத்தோ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset