செய்திகள் மலேசியா
சுங்கைபூலோ தாமான் பாயா ஜெராஸ் மெர்மாயில் 2ஆவது முறையாக வெள்ளம்: பரிதவிக்கும் மக்கள்
சுங்கைப்பூலோ:
கனமழையை தொடர்ந்து சுங்கைபூலோ தாமான் பாயா ஜெராஸ் மெர்மாய் குடியிருப்பில் வெள்ளம் ஏற்பட்டது.
அப்பகுதியில் இவ்வாண்டு ஏற்பட்ட இரண்டாவது வெள்ளப் பெருக்கு இதுவாகும் என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறினார்.
இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கனமழையை தொடர்ந்து சுங்கைபூலோவின் பல பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் சுங்கைபூலோ தாமான் பாயா ஜெராஸ் மெர்மாயில் மீண்டும் வெள்ளம் ஏறியது.
சுங்கைபூலோ நாடாளுமன்ற தொகுதிக்கு கீழ் இருக்கு இக்குடியிருப்பு பகுதிக்கு அருகில் சிறிய ஆறு உள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அந்த ஆற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் அக்குடியிருப்பில் அடிக்கடி வெள்ள பெருக்கு ஏற்படுகிறது. கடந்தாண்டு மூன்று முறை இங்கு வெள்ளம் ஏறியது.
இவ்வாண்டு கடந்த மார்ச் 8ஆம் தேதி சிவராத்திரி தினத்தன்று இங்கு வெள்ளம் ஏறியது.
கடந்த முறை கால் முட்டிக்கு கீழ் தண்ணீர் ஏறியது. ஆனால் இம்முறை குளிர்சாதன பெட்டியே மிதக்கும் வரை வெள்ள நீர் ஏறியது.
இதனால் இப்பகுதியில் வாழும் மக்கள் குறிப்பாக இந்தியர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
அடுத்து என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm
மக்கள் பிரச்சினைகளில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
April 29, 2024, 6:07 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
April 29, 2024, 5:39 pm
ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை: 178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்
April 29, 2024, 5:24 pm
உலக வங்கியின் அறிக்கை குறித்து விளக்கமளிப்பதை கல்வியமைச்சர் தவிர்த்துள்ளார்
April 29, 2024, 5:23 pm
போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட காதலர் ஜோடி கைது
April 29, 2024, 5:20 pm
கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு
April 29, 2024, 3:21 pm