நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் துணைப்பிரதமரின்  மகனிடம் காவல்துறை வாக்குமூலத்தைப் பதிவு செய்தது 

கோலாலம்பூர்: 

முன்னாள் துணைப்பிரதமர் துன் காஃபார் பாபாவின் மகன் தம்ரின் காஃபார் தமது வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்து தொடர்பில் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார்.

புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்திற்கு வருகை தந்த தம்ரின் காஃபார் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். எதிர்காலத்தில் மலேசிய அரசியலில் DAP கட்சியின் ஆதிக்கம் வலுவாக இருக்கும் என்று தம்ரின் காஃபார் தெரிவித்திருந்தார். 

இந்த பதிவைத் தொடர்ந்து அவருக்கு எதிராக போலீஸ் விசாரணை அறிக்கைகளைத் திறந்தது. 1998ஆம் ஆண்டு தொடர்பு பல்லூடக சட்டத்தின் செக்‌ஷன் 233யின் கீழ்  இந்த விவகாரம் விசாரிக்கப்படுகிறது. 

காவல்துறையினருக்குத் தாம் முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக தம்ரின் காஃபார் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset