நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பட்டப்பகலில் மாதுவின் சங்கிலியை அறுத்து சென்ற கொள்ளையன்: பிரிக்பீல்ட்ஸ் வீர அனுமான்  ஆலயத்தின் முன் பரபரப்பு 

கோலாலம்பூர்:

பட்டப்பகலில் மாதுவின் சங்கிலியை மோட்டார் சைக்கிளின் வந்த கொள்ளையன் அறுத்து சென்றுள்ளான்.

இந்த பரபரப்பு சம்பவம் பிரிக்பீல்ட்ஸ் வீர அனுமான் ஆலயத்தின் முன்  நிகழ்ந்தது.

இந்த கொள்ளை சம்பவம் அடங்கிய சீசீடிவி கேமரா பதிவுகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

அப்பதிவின் அடிப்படையில் இந்த சம்பவம் நேற்று ஏப்ரல் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு நடந்ததாக தெரிகிறது.

காலையில் மக்கள் ஆலயத்திற்கு வந்து செல்லும் போது, சம்பந்தப்பட்ட கொள்ளையன் மோட்டார் சைக்கிளில் அங்கும் இங்கும் சென்றான்.

அப்போது ஆலயத்தை நோக்கி நடந்து வந்த மாதுவின் கழுத்தில் உள்ள சங்கிலியை அறுத்து மின்னல் வேகத்தில் சென்றுள்ளான்.

இந்த சம்பவம் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாது குறித்தும் போலீஸ் தரப்பில் இருந்தும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset