நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

7 மோட்டார் சைக்கிள்களை  உட்படுத்திய விபத்தில் 3 இளைஞர்கள் மரணம்

கோத்தாபாரு:

7 மோட்டார் சைக்கிள்கள் உட்படுத்திய சாலை விபத்தில் 3 இளைஞர்கள் மரணமடைந்தனர்.

மேலும் மூவர் கடுமையான காயங்களுக்கு இலக்காகினர் என்று கோத்தா பாரு போலீஸ் தலைவர் முகமத் ரோஸ்டி டாவுத் கூறினார்.

நள்ளிரவு 12.30 மணியளவில், கெத்தேரேவில் இருந்து கோத்தாபாருவை நோக்கி மோட்டார் சைக்கிள்களில் ஒரு குழு சென்றது.

அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.

இதனைத் தொடர்ந்து பின்னால் வந்த நான்கு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் ஒரு சில வாகங்களும் சிக்கின.

இவ்விபத்தில் 19 முதல் 21 வயதுக்குட்பட்ட மூவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

மேலும் கடுமையான காயங்களுக்கு இலக்கான மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset