நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெந்திங்மலையில் சக நாட்டவரை கொலை செய்ததாக வங்காளதேச நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது

பெந்தோங்:

கெந்திங்மலையில் சக நாட்டவரை கொலை செய்ததாக வங்காளதேச நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த மாதம் கெந்திங்மலையில்  உள்ள கட்டுமான தளத்தில் கருப்பு பிளாஸ்டிக்கில் இருந்து ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இக்கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 34 வயதான அஷ்ரபுல் மியா மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அது புரிந்ததாக அவர் தலையசைத்தார்.

ஆனால் கொலை வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset