நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாரு தேர்தலில் தேசியக் கூட்டணி  மலாய் வேட்பாளரை நிறுத்த வேன்டும்

கோலாலம்பூர்:

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசியக் கூட்டணி மலாய் வேட்பாளரை நிறுத்த வேன்டும்.

இதை தான் அத்தொகுதி வாக்காளர்கள் விரும்புகின்றனர் என்று உலு சிலாங்கூர் பெர்சத்து கூறியது.

உலு சிலாங்கூர் சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் தேசியக் கூட்டணி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

தற்போது கோல குபு பாருவிலும் அதன் தாக்கம் தொடர வேண்டும். அதற்கு மலாய் வேட்பாளரை தேசியக் கூட்டணி களமிறக்க வேண்டும்.

இது தான் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள், வாக்காளர்களின் விருப்பமாக உள்ளது என்று உலுசிலாங்கூர் பெர்சத்துவின் இடைக்கால தலைவர் கைரூல் அஸ்ஹாரி சாய்த் கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்றத் இடைத் தேர்தல் குறித்து கட்சியின் தலைமை செய்லாளர் டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடினுடன் விவாதிக்கப்பட்டது.

அப்போது இந்த விருப்பம் அவரிடம் தெரிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset