நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தேசியக் கூட்டணி நிராகரிக்கிறது: டான்ஶ்ரீ மொஹைதின்

கோலாலம்பூர் -

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தேசியக் கூட்டணி நிராகரிக்கிறது அக் கூட்டணியின் தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசின் இதனை தெரிவித்தார்.

இந்த ஒதுக்கீடு தொடர்பான புதிய வரைவு முன்மொழிவு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் இந்த ஒதுக்கீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை  தேசியக் கூட்டணி நிராகரிக்கிறது.

இவ்விவகாரத்தில் தேசியக் கூட்டணி தனது நிலைப்பாட்டில் உறுதியாக்க உள்ளது.

எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் பிரேரணையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லாததே இதற்குக் காரணம்.

ஒதுக்கீட்டை வழங்குவதற்காக சில நியாயமற்ற நிபந்தனைகளை வைத்து தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset