நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாற்றுத் திறனாளி ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கு முடிவடையவில்லை: பிரதமர் அன்வார்

பூச்சோங்: 

மாற்றுத்திறனாளி ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கு இன்னும்  முடிவடையவில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

இந்த வழக்கு விசாரணை இன்னும் நடப்பதைப் பிரதமர் அன்வார் உறுதிப்படுத்தினார்.

வழக்கின் வளர்ச்சியை தான் தனிப்பட்ட முறையில் கண்காணிப்பதாகவும் இந்த வழக்குத் தொடர்பான  போலி தகவல்களை யாரும் பகிர வேண்டாம் என்று பிரதமர் 
அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார். 

வழக்கு விசாரணைக்குக் கால அவகாசம் தேவை. 

சில சமயங்களில், விசாரணை முடிவடைவதற்கு முன்பாக விசாரணை அறிக்கையைச் சட்டத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். 

சட்டத்துறை அலுவலகம் உண்மைகளின் அடிப்படையில் வழக்குத் தொடரலாமா வேண்டாமா என்பதை இறுதியில் முடிவு செய்வார்.

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி ஓங் இங் கியோங், அவரது வழக்கறிஞர் சம்பவத்தின் வீடியோவை வெளிப்படுத்தினர்.

வேண்டுமென்றே காயப்படுத்தியதற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 323-ன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset