செய்திகள் மலேசியா
மாற்றுத் திறனாளி ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கு முடிவடையவில்லை: பிரதமர் அன்வார்
பூச்சோங்:
மாற்றுத்திறனாளி ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கு இன்னும் முடிவடையவில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்னும் நடப்பதைப் பிரதமர் அன்வார் உறுதிப்படுத்தினார்.
வழக்கின் வளர்ச்சியை தான் தனிப்பட்ட முறையில் கண்காணிப்பதாகவும் இந்த வழக்குத் தொடர்பான போலி தகவல்களை யாரும் பகிர வேண்டாம் என்று பிரதமர்
அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.
வழக்கு விசாரணைக்குக் கால அவகாசம் தேவை.
சில சமயங்களில், விசாரணை முடிவடைவதற்கு முன்பாக விசாரணை அறிக்கையைச் சட்டத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும்.
சட்டத்துறை அலுவலகம் உண்மைகளின் அடிப்படையில் வழக்குத் தொடரலாமா வேண்டாமா என்பதை இறுதியில் முடிவு செய்வார்.
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி ஓங் இங் கியோங், அவரது வழக்கறிஞர் சம்பவத்தின் வீடியோவை வெளிப்படுத்தினர்.
வேண்டுமென்றே காயப்படுத்தியதற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 323-ன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 20, 2024, 7:16 pm
ஒப் குளோபலில் கைதான மற்றொரு மதராஸா உதவி ஆசிரியருக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு
September 20, 2024, 5:32 pm
நவம்பர் மாதம் வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது: மெட்மலேசியா
September 20, 2024, 5:21 pm
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு; அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும்: விஜய் அறிவிப்பு
September 20, 2024, 5:20 pm
சிறுவர்களின் திறனை வெளிப்படுத்த மேடை அமைத்து தரும் நோக்கில் பாடல் திறன் போட்டி: குணராஜ்
September 20, 2024, 5:18 pm
68 அரசு ஊழியர்களின் பாரிஸ் பயணம் ரத்து செய்யப்பட்டது: பிரதமர்
September 20, 2024, 4:24 pm