நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேலதிக விசாரணைக்காக ஹஃபிசுல் சிலாங்கூர் மாவட்டக் காவல் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டார்

சுபாங்: 

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கேஎல்ஐஏ-வில் துப்பாக்கி சூடு நடத்திய ஹஃபிசுல் மேலதிக விசாரணைக்காக சிலாங்கூர் மாவட்டக் காவல் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

ஊதா நிற முகமூடி மற்றும் லோகப் சட்டை அணிந்திருந்த ஹஃபிசுல் ஹவாரி பிற்பகல் 2.15 மணிக்கு கிளந்தான் கோத்தா பாருவிலிருந்து தேசியக் காவல்துறைக்குச் சொந்தமான கிங் ஏர் பி 300 என்ற தனி விமானத்தில் மூலம் விமானப் படை தளத்திற்கு வந்தடைந்தார். 

ஹஃபிசுல் ஹவாரி என்ற சந்தேக நபர் 36 மணி நேரத்துக்குப் பிறகு நேற்று மாலை 3 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைதான ஹஃபிசுல் விசாரணைக்கு உதவும் வகையில் 7 நாள் தடுப்பு காவல் உத்தரவை நீதிபதி ராய்ஸ் இம்ரான் ஹமித் வழங்கினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset