செய்திகள் மலேசியா
மாமன்னரை அவமதித்ததாகக் கூறப்படும் முகநூல் பதிவு தொடர்பாக 36 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன
ஜொகூர் பாரு:
மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை அவமதித்ததாகக் கூறப்படும் முகநூல் பதிவிற்கு எதிராக ஜொகூர் காவல்துறைக்கு 36 புகார் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று ஜொகூர் மாநில காவல்துறைத் தலைவர் எம். குமார் தெரிவித்தார்.
பல தரப்பினரால் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து, மேலதிக நடவடிக்கைக்காக புக்கிட் அமானுக்கு அனுப்பியதாகவும் அவர் கூறினார்.
தேசத் நிந்தனை சட்டம் 1948-இன் பிரிவு 4(1) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று எம்.குமார் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பாசிர் கூடாங் அம்னோ இளைஞர் பிரிவு சுல்தான் இப்ராஹிமுக்கு எதிராக அவதூறான மற்றும் அரசை அவமதிக்கும் வகையில் அவதூறான பதிவைப் பதிவேற்றியதாக முகநூல் கணக்கு வைத்திருப்பவர் மீது காவல்துறை புகார் அளித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 14-ஆம் தேதி ஹெஸ்ரி யாசின் என்ற முகநூல் கணக்கில் பதிவிடப்பட்ட அவதூறான பதிவு தொடர்பாக செரி ஆலம் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 17, 2026, 9:12 pm
மத்திய கிழக்கு போர்: நாட்டின் நீர் சேவைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு
March 17, 2026, 8:48 pm
பல வளங்களை கொண்டுள்ள மலேசியா ஓர் அற்புதமான நாடு; பொருளாதார நிலைத் தன்மையை உறுதி செய்வோம்: கைரி
March 17, 2026, 8:46 pm
மக்களை பிளவுப்படுத்தும் நபர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: கைரி
March 17, 2026, 6:14 pm
லங்காவி கோயில் வழக்கு: தமீம் சவூதி விசாவில் பயணம்
March 17, 2026, 6:13 pm
ஊடக துறைக்கு நவீன மாற்றம்: 34 நிறுவனங்களுக்கு பெரும் ஊக்க நிதி
March 17, 2026, 6:12 pm
கெரிக்கில் ஹிட்-அண்ட்-ரன் சம்பவம்: இளைஞர் உயிரிழப்பு
March 17, 2026, 5:18 pm
கடன் சுமை இல்லா ஹரி ராயா: 4,000 பேருக்கு விரைவு திவால் நிவாரணம்
March 17, 2026, 5:16 pm
சுற்றுலா துறையில் மலேசியா முன்னேற்றம்: VM2026க்காக ஒருங்கிணைந்த முயற்சி
March 17, 2026, 5:10 pm
