செய்திகள் மலேசியா
மாமன்னரை அவமதித்ததாகக் கூறப்படும் முகநூல் பதிவு தொடர்பாக 36 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன
ஜொகூர் பாரு:
மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை அவமதித்ததாகக் கூறப்படும் முகநூல் பதிவிற்கு எதிராக ஜொகூர் காவல்துறைக்கு 36 புகார் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று ஜொகூர் மாநில காவல்துறைத் தலைவர் எம். குமார் தெரிவித்தார்.
பல தரப்பினரால் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து, மேலதிக நடவடிக்கைக்காக புக்கிட் அமானுக்கு அனுப்பியதாகவும் அவர் கூறினார்.
தேசத் நிந்தனை சட்டம் 1948-இன் பிரிவு 4(1) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று எம்.குமார் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பாசிர் கூடாங் அம்னோ இளைஞர் பிரிவு சுல்தான் இப்ராஹிமுக்கு எதிராக அவதூறான மற்றும் அரசை அவமதிக்கும் வகையில் அவதூறான பதிவைப் பதிவேற்றியதாக முகநூல் கணக்கு வைத்திருப்பவர் மீது காவல்துறை புகார் அளித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 14-ஆம் தேதி ஹெஸ்ரி யாசின் என்ற முகநூல் கணக்கில் பதிவிடப்பட்ட அவதூறான பதிவு தொடர்பாக செரி ஆலம் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 17, 2025, 5:21 pm
மனிதவள அமைச்சராக முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்: டத்தோஸ்ரீ ரமணன்
December 17, 2025, 5:14 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன்; இந்திய தொழில் துறைகளுக்கு புதிய நம்பிக்கையை தருகிறது: டத்தோ அப்துல் ஹமித்
December 17, 2025, 1:49 pm
பிபிபி கட்சி இன்னமும் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியே: டத்தோ லோகபாலா
December 17, 2025, 1:30 pm
உலக அரங்கில் கால் பதித்த பேராக் சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி
December 17, 2025, 12:50 pm
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சராக யுனேஸ்வரன் பதவியேற்றார்
December 17, 2025, 12:36 pm
அமைச்சரவையில் தமிழில் பேசக்கூடிய முழு அமைச்சரின் தேவையை டத்தோஸ்ரீ ரமணனின் நியமனம் பூர்த்தி செய்துள்ளது: குணராஜ்
December 17, 2025, 12:21 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்
December 17, 2025, 10:46 am
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கை கொலையாக ஏஜிசி வகைப்படுத்தியதை 3 குடும்பங்கள் வரவேற்கின்றன
December 17, 2025, 8:39 am
