செய்திகள் மலேசியா
நெல், அரிசி விலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கார்டெல்களை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் தற்காக்கவில்லை: மாட் சாபு
கோலாலம்பூர்:
இந்நாட்டில் நெல், அரிசி விலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கார்டெல்களை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் தற்காக்கவில்லை என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் மாட் சாபு தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து அண்மையில் சில தரப்பினர் விசாரித்ததைத் தொடர்ந்து இன்று தனது முகநூல் பக்கத்தில் மாட் சாபு அதற்கான விளக்கத்தைப் பதிவிட்டுள்ளார்.
நெல், அரிசிகளைத் தங்களுக்குள் சுயாதீனமாக விலைகளை நிர்ணயித்துக் கொண்டு சந்தையில் மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்காத பிரிவினர் குறித்து மலேசிய போட்டி ஆணையத்திற்கு எந்தத் தகவலையும் தனது அமைச்சகம் தயாராக இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
அவர்களின் விசாரணையில் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தலையிடாது என்றும் அவர் கூறினார்.
நம் நாட்டில் நெல், அரிசி விலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கார்டெல்களைக் கண்டறிவதை மலேசிய போட்டி ஆணையம் தனது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 9:27 am
மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒருவர் மரணம்; 12 பேர் கைது: போலிஸ்
March 12, 2026, 9:18 am
புன்சாக் ஜாலிலில் ஏற்பட்ட தீ 2 ஹெக்டருக்கும் மேல் பரவியது: தீயணைப்புப் படை தீ அணைக்க போராட்டம்
March 11, 2026, 7:59 pm
கம்போங் பாண்டான் மதரஸாவில் வசதிக் குறைந்தவர்களுக்கு ரமலான் உதவி: முக்மின் வழங்கியது
March 11, 2026, 7:39 pm
3ஆர் பிரச்சினைகளை இன்னும் கடுமையாக கையாள அரசாங்கம் சட்டங்களை திருத்தலாம் அல்லது வரையலாம்: ஃபஹ்மி
March 11, 2026, 7:10 pm
மலேசிய - இந்தியா மகளிர் தொழில் முனைவோர், இளைஞர்களுடனான ஒத்துழைப்புகள் வலுப்பெற வேண்டும்: ஹேமலா
March 11, 2026, 5:25 pm
