நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

 அம்னோ, ஜசெக கட்சி உறுப்பினர்களுடன் மாமன்னர் சந்திப்பு

கோலாலம்பூர்: 

இன்று அம்னோ மற்றும் ஜசெக கட்சிகளின் உறுப்பினர்களை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கோலாலம்பூரிலுள்ள இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.  

நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் மத மற்றும் இன உணர்வு தொடர்பான பிரச்சனைகள் குறித்த அண்மைய முன்னேற்றங்களைத் தெரிந்து கொள்வதற்காக இந்தச் சந்திப்பு நடத்தப்பட்டதாக மாமன்னர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் அம்னோ துணைத் தலைவர் முஹம்மத் ஹாசன், மலாக்கா மாநில அம்னோ தலைவர் அப்துல் ராவுஃப் யூசோ, அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் அக்மால் சாலே, ஜசெக-வின் பொது செயலாளர் லியூ சின் தோங் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மக்களிடையே பிரிவினைக்கு பதிலாக ஒற்றுமையை வலுப்படுத்த அனைத்துத் தரப்பு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மாமன்னர் கேட்டுக் கொண்டார். 

நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருப்பதையே தாம்  பார்க்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

மத மற்றும் இனப் பிரச்சனைகளில் தொடர்பான கருத்துகளை வழங்கும்போது அக்கருத்துகள் பிரச்சனையை மேலும் வளர்க்கும் வண்ணம் இருக்காமல் இருப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர். 

அம்னோ, ஜசெக கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset