நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தகாத முறையில் பேசியதற்காக வருந்துகிறேன்: பிரதமர் முன்னிலையில் மன்னிப்பு கோரினார் சனுசி

ஜித்ரா:

தகாத முறையில் அவதூறு பேசியதற்காக பிரதமர் முன்னிலையில் கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி மன்னிப்பு கோரினார்.

தேசிய அளவிலான மடானி நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு ஜித்ராவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய சனுசி, அரசியல் சூழ்நிலையால் மத்திய அரசாங்கம், பிரதமர் உட்பட பலரை தாம் தரக்குறைவாக தாக்கி தகாத வார்த்தையில் பேசி உள்ளேன்.

இன்றைய இந்த நிகழ்வில் பிரதமர் உட்பட பல அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அவ்வாறு பேசியதற்காக மன்னிப்பு கோர இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.

பலவீனமான மனிதர்களாகிய நம் ஒவ்வொருவரிடமும் தவறுகளும் நிச்சயம் இருக்கும்.

ஷவ்வால்  மாதத்தில் நடைபெறும் இந்த சந்திப்பு, ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்று நான் நம்புகிறேன்.

தூய்மையான, நேர்மையான, பொறுப்பான மனதுடன் ஒன்றிணைந்து முன்னேறுவதற்கும் ஓர் அடித்தளமாக இந்த நிகழ்வு அமையும் என நான் நம்புகிறேன்.

அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் மோகத்தை மக்கள் நலன்கள் முறியடிக்க வேண்டும்.

அரசியல் ரீதியான அனைத்து விவகாரங்களும் அரசியல் களத்திற்கு மட்டுமே கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset