செய்திகள் மலேசியா
தகாத முறையில் பேசியதற்காக வருந்துகிறேன்: பிரதமர் முன்னிலையில் மன்னிப்பு கோரினார் சனுசி
ஜித்ரா:
தகாத முறையில் அவதூறு பேசியதற்காக பிரதமர் முன்னிலையில் கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி மன்னிப்பு கோரினார்.
தேசிய அளவிலான மடானி நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு ஜித்ராவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய சனுசி, அரசியல் சூழ்நிலையால் மத்திய அரசாங்கம், பிரதமர் உட்பட பலரை தாம் தரக்குறைவாக தாக்கி தகாத வார்த்தையில் பேசி உள்ளேன்.
இன்றைய இந்த நிகழ்வில் பிரதமர் உட்பட பல அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அவ்வாறு பேசியதற்காக மன்னிப்பு கோர இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.
பலவீனமான மனிதர்களாகிய நம் ஒவ்வொருவரிடமும் தவறுகளும் நிச்சயம் இருக்கும்.
ஷவ்வால் மாதத்தில் நடைபெறும் இந்த சந்திப்பு, ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்று நான் நம்புகிறேன்.
தூய்மையான, நேர்மையான, பொறுப்பான மனதுடன் ஒன்றிணைந்து முன்னேறுவதற்கும் ஓர் அடித்தளமாக இந்த நிகழ்வு அமையும் என நான் நம்புகிறேன்.
அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் மோகத்தை மக்கள் நலன்கள் முறியடிக்க வேண்டும்.
அரசியல் ரீதியான அனைத்து விவகாரங்களும் அரசியல் களத்திற்கு மட்டுமே கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm
இந்திய சமூக திட்டங்களை கண்காணிக்க சிறப்பு குழு தேவையில்லை: டத்தோ ரமணன்
May 18, 2024, 1:57 pm
ஜொகூரில் ஜெமா இஸ்லாமியா அமைப்பில் 20 உறுப்பினர்கள்: ரஸாருடின் தகவல்
May 18, 2024, 1:34 pm