நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் அந்நிய நாட்டு ஊடகத்தின் செய்தி தவறானது: ஃபஹ்மி

புத்ராஜெயா:

நாட்டில் பெட்ரோல் டீசல் விலை உயரம் என அந்நிய நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை முற்றிலும் தவறானது என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

கோல குபு பாரு இடைத்தேர்தலுக்கு பின் எரிவாயு பொருட்களுக்கான மானியம் குறைக்கப்படும்.

உலக  சந்தை விலைகளுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படும் என்று அந்நிய நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.

இதை நான் உறுதியாக கூறுவேன். காரணம் அந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருந்தேன்

ஆகவே சம்பந்தப்பட்ட அந்நிய நாட்டு ஊடகச் செய்தி முற்றிலும் தவறானது.

இதை மக்கள் நம்ப வேண்டாம் என்று அரசாங்க பேச்சாளருமான ஃபாஹ்மி கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset