செய்திகள் மலேசியா
உலு சிலாங்கூரில் பொது மருத்துவமனை கட்டுவதற்கான முயற்சிகள் தொடரும்: டாக்டர் சத்தியபிரகாஷ்
கோல குபு பாரு:
உலு சிலாங்கூரில் அரசு பொது மருத்துவமனை கட்டுவதற்கான முயற்சிகள் தொடரும் என்று அத்தொகுதியின் நம்பிக்கை கூட்டணி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் கூறினார்.
நாட்டில் 15ஆவது பொதுத் தேர்தலில் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் நான் போட்டியிட்ட போது இங்கு மருத்துவமனை கட்டப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்.
ஆனால், அந்தத் தேர்தலில் சிறு பெரும்பான்மையில் நான் தோல்வி கண்டேன்.
அதனால் அம் மருத்துவமனை விவகாரத்தை நான் மறந்துவிட்டதாக யாரும் நினைக்க வேண்டாம்.
மலாக்கா மாநிலத்தை விடப் பெரியது இந்த உலு சிலாங்கூர் தொகுதி. இங்கு வசிக்கும் மக்கள் பயன் பெரும் வகையில் அனைத்து வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனை கட்டுவது மிக அவசியம்.
ஆகவே, இந்த விவகாரத்தை நான் கைவிட மாட்டேன். தொடர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
அதே வேளையில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவர் இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டும்.
வெற்றி பெற வைத்த மக்களின் நலனுக்காக அவர்தான் குரல் கொடுக்க வேண்டும்.
கோல குபு பாருவில் நடைபெற்ற மடானி மருத்துவ முகாம் நிகழ்வுக்கு பின் டாக்டர் சத்தியபிரகாஷ் இதனை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm
இந்திய சமூக திட்டங்களை கண்காணிக்க சிறப்பு குழு தேவையில்லை: டத்தோ ரமணன்
May 18, 2024, 1:57 pm
ஜொகூரில் ஜெமா இஸ்லாமியா அமைப்பில் 20 உறுப்பினர்கள்: ரஸாருடின் தகவல்
May 18, 2024, 1:34 pm