நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விவாகரத்து கேட்ட மனைவியைப் பாராங் கத்தியால் தாக்கிய கணவன்:

கோலா திரெங்கானு: 

டுங்குன், கெத்தெங்கா ஜெயாவில் விவகாரத்துக் கேட்ட பெண்ணைக் கணவன் பாராங் கத்தியால் தாக்கியச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

64 வயதுடைய கணவருக்கும் 39 வயதுடைய அவருடைய மனைவிக்கும் நடந்த வாக்குவாதத்தின் போது இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று டுங்குன் மாவட்டக் காவல்துறை தலைவர் மைசூரா அப்துல் காடீர் கூறினார். 

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய போது அப்பெண் தனது கணவரிடம் விவாகரத்து கோரியுள்ளார். 

தனது மனைவியின் வேண்டுகோளால் ஆத்திரமடைந்த கணவர் பாராங் கத்தியைக் கொண்டு அப்பெண்ணின் தலை பகுதியில் தாக்கியுள்ளதாகவும் மைசூரா தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட பெண் சுல்தானா நூர் சாஹிரா மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்வதற்கு முன்னதாக டுங்குன் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவருக்கு நெற்றியில் ஒன்பது சென்டிமீட்டர் காயம் ஏற்பட்டு 10 தையல்கள் போடப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட ஆடவரைக் காவல்துறையினர் இப்போது தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 326 இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் மைசுரா கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset