செய்திகள் மலேசியா
கூட்டுறவு சங்கத்தின் சமூக பங்களிப்பு தொடரும்: டத்தோ சகாதேவன்
பெட்டாலிங் ஜெயா:
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் சமூக பங்களிப்பு தொடரும் என்று அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன் தெரிவித்தார்.
கூட்டுறவு சங்கத்தின் சிலாங்கூர் மாநில வட்டாரக் கூட்டம் இன்று தோட்ட மாளிகையில் நடைபெற்றது.
மாநிலப் பேராளர்களை தேர்ந்தெடுப்பதற்காக கூட்டுறவு சங்க சிலாங்கூர் மாநில உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் தோட்ட மாளிகைக்கு திரண்டனர்.
கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குநருமான சகாதேவன், தலைமைச் செயலாளர் டத்தோ ராஜ் ஆகியோர் முன்னிலையில் இந்தப் பேராளர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
ஏறக்குறைய 60 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட கூட்டுறவு சங்கத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும்சுமார்15ஆயிரம் பேர் அங்கத்தினர்களாக உள்ளனர்.
இன்றைய தேர்தலில் 1,517 அங்கத்தினர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சகாதேவன், கூட்டுறவு சங்கத்தின் சமூக நல உதவிகளும் கூட்டுறவு சங்க அங்கத்தினர்களின் பிள்ளைகளுக்கான கல்வி நிதி உதவியும் தொடரும் என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 11:26 am
தகாத முறையில் பேசியதற்காக வருந்துகிறேன்: பிரதமர் முன்னிலையில் மன்னிப்பு கோரினார் சனுசி
May 5, 2024, 10:47 am
கெடாவில் கடும் ஏழைகளின் எண்ணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க 2 மாதம் அவகாசம்: பிரதமர்
May 5, 2024, 10:32 am
பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் அந்நிய நாட்டு ஊடகத்தின் செய்தி தவறானது: ஃபஹ்மி
May 4, 2024, 6:19 pm