நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழிபாட்டு சிலையைச் சேதப்படுத்திய ஆடவர் காவல்துறையினரால் கைது

மஞ்சோங்: 

சீன ஆலயத்தின் வழிபாட்டு சிலையைச் சேதப்படுத்திய ஆடவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் கம்போங் கோ எனும் பகுதியில் நிகழ்ந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்புக்கு மதியம் 1.30 மணிக்கு புகார் ஒன்று கிடைக்கப்பெற்றதாக மஞ்சோங் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் முஹம்மத் நோர்டின் அப்துல்லா கூறினார். 

சம்பந்தப்பட்ட ஆடவர் சீன கோவிலில் உள்ள சிலைகளை எட்டி உதைத்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் வைரலானது. 

இதை தொடர்ந்து, 35 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் தைப்பிங்கில் கைது செய்யப்பட்டார். அந்த ஆடவர் பயன்படுத்திய கைப்பேசியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

வழிபாட்டு தலங்களைச் சேதப்படுத்திய குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 295யின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட ஆடவருக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்படும் வகையில் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுவார் என்று அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset