நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூச்சோங் 14 ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தின் கட்டுமானப் பணி பூர்த்தியடைவதற்கான முயற்சிகள் தொடரும்: டத்தோ மோகன்

புத்ராஜெயா:

பூச்சோங் 14 ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மாநாட்டு மண்டபத்தின்
கட்டுமானத்தை நிறைவு செய்வதற்கான முயற்சிகள் தொடரும்.

மஇகா உதவித் தலைவரும் கட்டட நிதி திரட்டும் நிகழ்வின் இயக்குநருமான டத்தோ டி. மோகன் கூறினார்.

ஆலயத் தலைவர் ஏபி சிவம் தலைமையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

70 விழுக்காடு கட்டுமானப் பணிகள் பூர்த்தி அடைந்திருக்கும் வேளையில் இன்னும் 30 விழுக்காடு கட்டுமானப் பணிகள் பூர்த்தி அடைய நிதி தேவைப்படுகிறது.

மூன்று மாடிகள் கொண்ட இந்த மண்டபத்தை திருமணம் உட்பட அனைத்து சுப காரியங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதே வேளையில் ஆலயத்தின் சமூக கடப்பாட்டு திட்டங்களுக்கும் இம் மண்டபம் பெரும் பயனாக இருக்கும்.

இதன் அடிபடையின்தான் இந்த நிதி திரட்டும் நிகழ்வு நடத்தப்படுகிறது.

இந்நிகழ்வின் இயக்குநராக எனது பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றியுள்ளேன் என நம்புகிறேன்.

இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பிரமுகர்கள், நன்கொடையாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டத்தோ டி. மோகன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset