நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாதுகாப்புப் பெட்டியைக் குறிவைத்து கொள்ளையடிக்கும் 5 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்: ஹுசைன் ஒமர் கான்

ஷாஆலம்:

பாதுகாப்புப் பெட்டியைக் குறிவைக்கும் வன்முறை பின்னணி கொண்ட 5 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று சிலாங்கூர் போலீஸ்படைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார்.

புத்ரா ஹைட்ஸில் உள்ள பெர்சியாரன் ஹார்மோனியில் ஐந்து குற்றவாளிகள் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2022 முதல் செயல்படத் தொடங்கியவர்கள் சிலாங்கூர், கோலாலம்பூர் முழுவதும் 50 கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது.

25 முதல் 30 வயதுக்குட்பட்ட ஐந்து உள்ளூர்வாசிகள் அடங்கிய கும்பல், அவர்களைத் தடுக்க முயன்ற போலீஸ் அதிகாரிகளை காயப்படுத்தத் தயங்கவில்லை.

இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தலா ஏழு முதல் 16 வழக்குகள் வரையிலான கடந்தகால குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட கும்பல் தொழிற்சாலை, அலுவலக வளாகங்களை குறிவைத்து கொள்ளை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக பாதுகாப்பு பெட்டி வைத்திருக்கும் தளவாட நிறுவனங்களை குறிவைத்து, குடியிருப்பு வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset