நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாடுவில் பதிவு செய்ய அடையாளத் திருட்டு: கைரி போலீசில் புகார்

கோலாலம்பூர்:

பாடு முதன்மை தரவுத் தளத்தில் பதிவு செய்வதற்கு தமது அடையாள அட்டை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுவொரு அடையாளத் திருட்டு என்ற அடிப்படையில் முன்னாள் சுகாதார அமைச்சர்  கைரி ஜமாலுடின் போலீஸ் புகார் செய்யவுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கைரி, தரவுத் தளத்தில் பதிவு செய்ய யாரோ ஒருவர் தனது அடையாள அட்டை எண்ணை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறினார்.

மேலும் பாடுவில் பதிவு செய்யும் போது பெற்ற செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார்.

கைரி ஏற்கெனவே தரவுத்தளத்தில் கணக்கு வைத்திருப்பதாகவும், அவர் தனது தகவலைப் புதுப்பிக்க உள்நுழைய வேண்டும்.

 அல்லது உதவிக்கு பாடு ஹாட்லைனைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அச் செய்தி கூறுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் தாம் போலீஸ் புகார் செய்யவும் கைரி முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இறுதியாக இன்று மாலை பாடுவில் பதிவு செய்ய முடிந்தது. 

ஏற்கெனவே நான் இதற்கு முன் பதிவு செய்ததில்லை என்று கைரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset