நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நியூசிலாந்தில் நடந்த விபத்தில் இரு மலேசிய மாணவர்கள் மரணம்: விஸ்மா புத்ரா

கோலாலம்பூர்: 

நியூசிலாந்தின் லேக் தேக்காப்போ பகுதியில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் மலேசிய மாணவர்கள் இருவர் உயிரிழந்ததை மலேசிய வெளியுறவு அமைச்சகம் விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது.

இதே விபத்தில் சிக்கிய மேலும் மூன்று மலேசிய மாணவர்களும் உடனடியாக சிகிச்சைக்காக நியூசிலாந்தின் சவுத் தீவுகளில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்தது 

வெளியுறவு அமைச்சகம் இன்று மார்ச் 30-ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மதியம் 1.45 மணிக்கு நியூசிலாந்தின் லேக் தேக்காப்போ பகுதியில் ஐந்து மலேசிய மாணவர்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து சம்பவத்தை உறுதிப்படுத்த விரும்புகிறது.

வெலிங்டனில் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மலேசியர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குத் தகுந்த தூதரக உதவிகளை வழங்கியுள்ளது. 

விபத்தில் மரணமடைந்த மாணவர்களின் உடலை மலேசியாவிற்கு கொண்டு வர உறவினர்கள் முடிவு செய்தால் தூதரகம் உதவி செய்ய தயாராக உள்ளது 

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வெளியுறவு அமைச்சகமும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset