நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குவந்தானிலுள்ள கேகே சூப்பர்மார்ட்டில் பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம்

குவாந்தான்:

பகாங், குவாந்தான் சுங்கை ஈசாபிலுள்ள கேகே சூப்பர்மார்ட்டில் மற்றொரு பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல் குறித்துத் காலை 5.40 மணியளவில் தமது தரப்புக்குத் தகவல் கிடைத்ததாக குவாந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர், ஏசிபி வான் முஹம்மத் ஜஹாரி வான் புசு தெரிவித்தார். 

அடையாளம் தெரியாத நபர் பெட்ரோல் வெடிகுண்டைக் கடையில் எறிந்ததால், கடையின் நுழைவாயிலில் தீப்பிடித்துள்ளது. 

சம்பவத்தின் போது, ​​​​கடையில் இரண்டு ஊழியர்கள் இருந்தனர்.

ஒரு பெண் ஊழியர் கவுண்டரில் இருந்த நிலையில் மற்றொரு ஆண் ஊழியர் பின் அலமாரியில் பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்ததாகவும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். 

கடையிலுள்ள நான்கு விற்பனை அலமாரிகள் இருந்ததாகவும், அதில் தீப்பொறிகள் தாக்கியதால் த விற்பனை பொருட்கள் சேதமடைந்தன. 

மொத்த இழப்பு 500 வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் சட்டம் பிரிவு 435 இன் படி விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset