நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் 10 ஆயிரம் பேருடன் நோன்பை திறந்தார்

புத்ராஜெயா:

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நூசுல் அல் குர்ஆன் விடுமுறையை ஒட்டி டத்தாரான் புத்ரா ஜெயாவில் கிட்டத்தட்ட 10,000 பேருடன் நோன்பை திறந்தார்.

மலேசியா இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்காக, 

அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுடன், மாலை 6.57 மணிக்கு அன்வார் அந்த இடத்திற்கு வந்தார்.

கல்வி அமைச்சர் ஃபாத்லினா சிடேக், பிரதமர் துறையின் துணை அமைச்சர் (மத விவகாரங்கள்) சுல்கிப்லி ஹசன், இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் அடம் அட்லி, தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் கே.சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நோன்பு துறந்த பிறகு, மசூதியின் மூத்த துணை இயக்குனர் அப்துல் கரீம் ஜகாரியா தலைமையில், டத்தோஶ்ரீ அன்வார் புத்ரா மசூதியில் மக்ரிப் தொழுகையை நிறைவேற்றினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset