நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குர்ஆனை விளங்கிக் கொள்வதற்கு ரமலான் மாதத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்

புத்ரா ஜெயா:

குர்ஆனை ஆய்வு செய்வதற்கும் விளங்கிக் கொள்வதற்கும் ரமலான் மாதத்தில்  கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துமாறு முஸ்லிம்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்  

ரமலானில் குர்ஆனை அதிகமாக அர்த்தம் உணர்ந்து படிக்குமாறு முஸ்லிம்களுக்கு அறிவுறுத்திய பிரதமர் குர்ஆனைப் படிக்கும்போதும், ஓதும்போதும், மனப்பாடம் செய்வதிலும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்று நுஸுல் குர் ஆன் வாழ்த்துச்செய்தியில் அவர் கூறினார், 

குர்ஆனின்  அர்த்தங்களைப் புரிந்துகொள்வதோடு வாழ்க்கையில் குர் ஆன் கூறும் வழிகாட்டுதல்கள் படி நடப்பது முக்கியமானது.  இந்த மாதத்தில் மட்டுமல்லாமல் எப்போதும் அல்லாஹ்வின் வார்த்தைகளைப் பற்றி சிந்திக்க நேரம் ஒதுக்குவது முக்கியம். குறிப்பாக அதில் வலியுறுத்தப்பட்டுள்ள  உலகளாவிய மனிதநேய  பண்பை நாம் பேணவேண்டும் என்று பிரதமர் கூறினார். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset