நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதியை மஇகா கோராது: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதியை மஇகா கோராது. அது எங்கள் தொகுதி அல்ல. நாங்கள் ஏன் அந்த தொகுதியை கோர வேண்டும் என மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

நாங்கள் ஒரு சுயநலக் கட்சி அல்ல. நாங்கள் இப்போது ஒரு கூட்டணியில், அரசாங்கத்தில் இருக்கிறோம், 

எனவே ஒற்றுமை அரசாங்கம் வெற்றி பெறுவதை உறுதி செய்வோம்.

18 சதவீதத்துக்கும் அதிகமான இந்திய வாக்காளர்களைக் கொண்ட கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கு அக் கட்சி உரிமை கோருமா என்று கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

மஇகா பாரம்பரியமாக தங்களுக்குச் சொந்தமான தொகுதிகளை மட்டுமே கோருகிறது.

மேலும் அத் தொகுதிகளில் வெற்றி பெறுவதை உறுதிசெய்யும் வகையில் நாங்கள் இருக்கிறோம். அதுவே எங்களின் குறிக்கோள்.
 
நாங்கள் நியாயமற்ற கட்சி அல்ல. விஷயம் இயல்பாக எங்களுடையதாக இருந்தால் மட்டுமே நாங்கள் கேட்போம், கோருவோம் என்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset