நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேகே மார்ட் தொடர்பான 3R பிரச்சனையைப் பெரிதாக்குவதை நிறுத்துங்கள்: புக்கிட் அமான் எச்சரிக்கை

 

கோலாலம்பூர்: 

3 ஆர் எனப்படும் இனம், மதம் மற்றும் ஆட்சியாளர் தொடர்பான பிரச்சனையை அரசியல்வாதிகள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும்  பெரிதாக்குவதை நிறுத்த வேண்டும் என்று புக்கிட் அமான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தற்போது கேகே சூப்பர் மார்ட்டில் அல்லாஹ் என்ற வார்த்தைய எழுதப்பட்ட காலுறைகள் விற்பனை தொடர்பான பிரச்சனை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் அமைச்சர் கைரி இந்தப் பிரச்சனையிலிருந்து அனைத்துத் தரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் முஹம்மத் சுஹைலி முஹம்மத் ஜைன் உடன்படுவதாகக் கூறினார்

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருவதால் இனப் பிரச்னைகள் தொடர்பான புகார் அறிக்கையைத் தங்கள் தரப்பு விசாரிக்கும் என்றும் அவர் கூறினார். 

அரசு அல்லது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான விசாரணை ஆவணங்களைத் திறப்பதில் மிகவும் உறுதியாக இருப்பதையும் அவர் குறிப்பிட்டார். 

இன்று புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த விவகாரம் நாட்டின் நற்பெயருக்குக் கலங்கம் ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset