நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

'ஆன்ட்டி பெர்சே' குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல் 

கோலாலம்பூர்:

கடந்த திங்கட்கிழமை 'ஆன்ட்டி பெர்சே' என்று அழைக்கப்படும் ஆங்கில ஆசிரியை அன்னே ஓய்  காலமானதையடுத்துப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவரது குடும்பத்தினருக்குத் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

78 வயதான 'ஆன்ட்டி பெர்சே' ஒரு தொடர்ச்சியான செயல்பாட்டாளராகவும், மாற்றத்தை வலியுறுத்தும் அடுத்த தலைமுறைக்கு முன்மாதிரியாகவும் நினைவு கூரப்படுவார் என்று கூறினார்.

மேலும் 'ஆன்ட்டி பெர்சே' தனது வாழ்க்கையின் இறுதி வரை மக்களின் அடையாளங்களில் ஒருவராக முன்னோடியாகத் துணிச்சலாகச் செயல்பட்டார் என்று பிரதமர அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset