நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

என்னைத் தூக்கில் போடுங்கள்: போதைப் பொருள் குற்றவாளி உருக்கம்

மலாக்கா:

என்னைத் தூக்கில் போடுங்கள். அது போதும் என்று போதைப் பொருள் வழக்கில் கைதான 39 வயதான எங் சான் கியோங் நீதிமன்றத்தில் உருக்கமாக கூறினார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் 2.7 கிலோ கிராம் போதைப் பொருளை விநியோகித்த குற்றத்திற்காக எங் சான் கியோங் கைது செய்யப்பட்டார்.

அவர் மீதான வழக்கு விசாரணை நீதிபதி டத்தோ அல்சல்ம் சார்லஸ் தலைமையில் ஆயர் கெரோ உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து என்னை சாகும் வரை தூக்கில் போடுங்கள். அது போதும் என்று எங் நீதிமன்றத்தில் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அவ்வாடவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

எங் கைதான 2018 அக்டோபர் 2ஆம் தேதியில் இருந்து இந்த சிறைத் தண்டனை அமலுக்கு வருகிறது.

மேலும் அவருக்கு 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset