நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பீடோரில் கேகே மார்ட் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பீடோர்:

பேரா பீடோரில் உள்ள கேகே மார்ட் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்தது.

அல்லாஹ் வார்த்தைக் கொண்ட காலுறை விற்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேகே மார்ட்டின் உரிமையாளர்கள் மீது இன்று காலை ஷாஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் பீடோரில் உள்ள கேகே மார்ட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

அக்குண்டு காலிப் பகுதியில் விழுந்தது. ஆனால் அக்குண்டு தீப்பிடிக்கவில்லை.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சைனா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியிடவில்லை.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset