நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேர்தல் நடத்தை மீறல் தொடர்பாக இதுவரை ஒரு புகார் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது: மலேசிய தேர்தல் ஆணையம்  தகவல் 

கோலாலம்பூர்: 

கோலகுபு பாரு தேர்தல் நடத்தை மீறல் தொடர்பாக இதுவரை ஒரு புகார் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மலேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் கானி சாலே கூறினார். 

மாட்சியமை தங்கிய மாமன்னரின் புகைப்படத்தை உட்படுத்தி ஆடவர் ஒருவர் தேர்தல் பரப்புரையில் பயன்படுத்திய குற்றத்திற்காக மட்டும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது என்று டான்ஶ்ரீ அப்துல் கானி சாலே விளக்கமளித்தார். 

குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஒரு மாத கால சிறைத்தண்டனை, மூவாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. 

கோலகுபு பாருவில் தேர்தல் பரப்புரை மிகவும் ஆரோக்கியமாகவும் வரவேற்க்ககூடியதாக உள்ளதாகவும் எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் இதுவரை இல்லை என்று அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset